tag:blogger.com,1999:blog-9005891643361751248.post1914841896616578898..comments2023-03-29T01:37:43.303-07:00Comments on ஆராய்வு: சந்தி சிரிக்கும் தமிழர் அரசியல் - தமிழ் ஈழம் 20/20ஜீவேந்திரன்http://www.blogger.com/profile/07783068554389311796noreply@blogger.comBlogger9125tag:blogger.com,1999:blog-9005891643361751248.post-72723122303566279562010-03-19T02:21:14.759-07:002010-03-19T02:21:14.759-07:00-பருத்தியன்-அனுப்பிய மின்னஞ்சல்- continue
பாராளும...-பருத்தியன்-அனுப்பிய மின்னஞ்சல்- continue <br />பாராளுமன்றத் தேர்தலுக்காக போட்டியிடும் அனைத்துக் கட்சிகளும் தற்போது மும்முரமாக தேர்தல் நடவடிக்கைகளில் ஈடுபடத் தொடங்கியுள்ளன. குறிப்பாக தமிழ் அரசியல் கட்சிகளின் நடவடிக்கைகள் மிகவும் வினோதமாய் அமைந்துள்ளன. வழமையாக ஒரு தேர்தல் வரும்போது கட்சிகள் சில ஒற்றுமையாகி கூட்டணி வைத்து தம்மை பலப்படுத்திக் கொள்ளவே முயலும். ஆனால் தமிழரை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பிரிவடைந்து மூன்று அணிகளாக உருவாகியிருப்பதானது முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு விடயம். தாயகத்திலுள்ள தமிழர்களினைப் பொறுத்தவரையில் தற்பொழுது சிங்கள தேசத்தினால் நிர்ணயிக்கப்படும் தேர்தல்களில் அதிக நாட்டமில்லாதவர்களாகவே காணப்படுகின்றார்கள்.வாக்களிக்க ஆர்வமுள்ள அற்ப சொற்ப வீதமானவர்களைக் கூட தமது அச்சுறுத்தல்களினால் அடக்கிவிடுகின்றது சிங்கள வல்லாதிக்கம். அதைத்தான் கடந்த ஜனாதிபதித் தேர்தலின்போது காணமுடிந்தது. நிலைமை இப்படியிருக்க, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிளவென்பது தமிழர்கள் மத்தியில் ஒரு குழப்பத்தினையும் விரக்தி நிலையையுமே உருவாக்கியிருக்கின்றது.<br />இந்த நிலையில் தமிழர்களின் பாராளுமன்றப் பிரதிநிதித்துவம் சிதறடிக்கப்படுவது உறுதி என்ற மகிழ்ச்சியான செய்தியை மகிந்தவுக்கு முன்கூட்டியே அறிவித்திருக்கின்றார்கள் நம் தமிழ் அரசியல் சாணக்கியர்கள்.<br /><br /><br />ஒவ்வொரு தன்மானமுள்ள தமிழனும் தமிழீழம் என்ற இலட்சியக் கனவினை அடிமனதில் சுமந்தபடியே வாழ்கின்றான் என்பதனை இந்த அரசியல்வாதிகள் கட்டாயம் புரிந்துகொள்ள வேண்டும். தமிழ்த் தேசியக் கோட்பாட்டினைக் கைவிட்டவர்கள் எவராக இருந்தாலும் அவர்கள் முற்றிலுமாக நிராகரிக்கப்பட வேண்டியவர்கள். தற்போழுதும், எப்பொழுதும் உண்மையான தமிழ்த் தேசிய விடுதலை உணர்வுடன் இருப்பவர்களை இனங்கண்டு வாக்களிப்பதன் மூலமே தமிழர்களின் பிரதிநிதித்துவத்தினை உறுதிப்படுத்த முடியுமென்பதுடன், தாயகத்தில் வாழும் தமிழர்களின் அபிலாசையும், கோரிக்கையும் தமிழீழத் தேசியமே என்பதனை சர்வதேசத்திற்குத் தெரியப்படுத்தவும் முடியும்.<br /><br />ஒரு பேரழிவின் பின்னும் ஒன்றுபடாத இனமாக தமிழினம் இருப்பது சகிக்க முடியாத வலியை மட்டுமே கொடுக்கின்றது. தாயக நிலைமை இவ்வாறிருக்க, புலம்பெயர் தேசங்களில் தொடரப்படும் ஜனநாயக வழிப் போராட்டங்களில் கூட பிளவுபட்ட நிலையே காணப்படுகின்றது. நாடுகடந்த தமிழீழ அரசு, உலகத் தமிழர் பேரவை, வட்டுக் கோட்டைத் தீர்மானம் என பல வழிகளில் தொடரப்படும் போராட்டங்களின் நோக்கங்கள் , கொள்கைகள் தாயக விடுதலையையே முன்னிலைப்படுத்துவதாய் அமைந்தாலும், இவ்வமைப்புக்களுக்கிடையில் ஆரோக்கியமான ஒருங்கிணைந்த புரிந்துணர்வும், ஒத்துழைப்பும் இல்லையென்பதும் தெரிகின்றது. இந்த நிலை மாற்றப்பட்டு தாயக விடுதலை என்ற இலட்சியத்தினை நோக்கி சமாந்தரமாகப் பயணிக்கும் முப்படையணிகளாக எதிர்காலத்தில் தமது ஜனநாயக வழி போராட்டங்களினை ஒற்றுமையாக முன்னெடுக்க வேண்டுமென்பதே அனைத்துத் தமிழர்களின் விருப்பமும் எதிர்பார்ப்புமாக உள்ளது. அத்தோடு, இவற்றின் அனைத்து முன்னெடுப்புக்களுக்கும் தமது முழு ஆதரவினைத் தெரிவித்து தாயக விடுதலைக்காக உழைக்க வேண்டியது அனைத்து புலம்பெயர் தமிழர்களினது கடமையாகவும் அமைகின்றது.<br /><br />ஒரு இனத்தின் எதிர்காலத்தினை அந்த இனமே தீர்மானிக்கவேண்டும். அதை வேறொருவர் தீர்மானிக்க எந்த விதத்திலும் அனுமதிக்கக் கூடாது.<br /><br />எமது இனத்தின் எதிர்காலமும் விடுதலையும் எமது விடுதலை உணர்விலேயே தங்கியுள்ளன.<br />இந்த உண்மைகளை நன்கு புரிந்து கொண்டவர்களாய், வரவிருக்கும் காலங்களில் தமிழ்த் தேசியக் கோரிக்கையினை வெளிப்படுத்துவோம்!<br /><br />தமிழீழம் ஒன்றுதான் தமிழருக்கான நிரந்தரத் தீர்வு என்பதை சர்வதேசத்திற்கு தெரிவிப்போம்!<br /><br />"தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்"<br /><br />-பருத்தியன்-<br />paruththiyan@gmail.comஜீவேந்திரன்https://www.blogger.com/profile/07783068554389311796noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9005891643361751248.post-26852055683055558342010-03-19T02:19:57.545-07:002010-03-19T02:19:57.545-07:00-பருத்தியன்-அனுப்பிய மின்னஞ்சல்-
நமது இனம் திட்ட...-பருத்தியன்-அனுப்பிய மின்னஞ்சல்- <br /><br />நமது இனம் திட்டமிடப்பட்டு சிதைக்கப்பட்டிருக்கின்றது... சிதைக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது. எதிரியும், துரோகிகளும் தான் அதை செய்கின்றார்கள் என்றிருந்தால், இன்றோ... அதை நாமே செய்துகொண்டிருக்கின்றோம். தமிழரின் தலைமைத்துவம் ஒற்றைக் கேள்விக்குறிக்குள்ளேயே அடங்கிவிட்டிருக்கின்றது. ஈழ தேசத்தின் விடுதலைப் போராட்டம் முள்ளிவாய்க்காலோடு முற்றுப் பெறவில்லை என்பதனை தற்போதைய சர்வதேச நிகழ்வுகள் எடுத்தியம்பும் நிலையில், புலிகளின் பின் நாம்தான் தமிழருக்கான பிரதிநிதிகள் என்று முளைத்த தமிழ் தேசியக் கூட்டமைப்பு இன்று பல கூறமைப்பாய் சிதறி நிற்கின்றது. ஒன்றுபட்டு குரலெழுப்பி தமிழரின் உரிமையைக் காக்க வேண்டியவர்கள் இன்று கூறுபட்டுக் குழப்பி நிற்பது வேதனைக்குரியது. <br /><br /><br />இங்கு யார் பிரிந்தார்கள்; பிரிக்கப்பட்டார்கள் என்பவற்றின் காரண காரியங்களை இரண்டாம் பட்சமாக வைத்து, இவ்வளவு காலமாய் நம் மக்கள் பட்ட துன்பங்கள்,கஷ்டங்கள்,இழப்புக்கள் எல்லாம் எதற்காக??? என்ற கேள்வியை முதன்மையாக வைப்போம்.<br /><br /> சிங்களவன் போடும் பிச்சைத் தீர்வை வாங்கிக் கொள்வதற்கு இவ்வளவு போராடியிருக்கத் தேவையில்லை. இவ்வளவு அவலங்களை சந்தித்திருக்க வேண்டியதில்லை. ஆனால், போகிற போக்கில் இவர்களின் ஒற்றுமையில்லாத செயற்பாடுகளினூடாக சிங்களவன் போட நினைக்கும் பிச்சைத் தீர்வைவிட கேவலமான ஒரு தீர்வுதான் தமிழருக்குக் கிடைக்கும் போலிருக்கின்றது. அப்போது இவர்கள் ஏதாவது சொல்வதற்கும், செய்வதற்கும் ஒன்றுமே இருக்காது. எதிர்த்துக் கேட்கத் திராணியற்றவர்களாய் நிற்பார்கள். இவர்களோடு துணைநின்ற துணைக்கண்டம் கூட துணை நிற்காது. மேற்குலகமும் வேடிக்கை பார்த்து நிற்க தமிழருக்கான தீர்வு நாடகம் அரங்கேற்றப்படும். தமிழர்களின் பிரதிநிதிகளாய் சிங்களம் சொல்லும் எதனையும் ஆமோதிக்கும் தமிழ்த் தலைவர்கள் மாத்திரம் விருந்தினர்களாய் வந்து உட்கார அனுமதிக்கப்படுவார்கள்.<br />தமிழர்களின் எதிர்காலம் நமது அரசியல் சாணக்கியர்கள் முன்னாலேயே சிங்களவன் கைகளிற்கு எழுதிக் கொடுக்கப்படும்.<br /><br />நம் மக்கள் செய்த தியாகங்கள் எல்லாம் மண்ணாய்ப் போகும்! மண்ணோடு மண்ணாகிப் போன நம் மாவீரர் கனவுகள் எல்லாம் வீணாய்ப் போகும்! தமிழீழம் என்கின்ற தேசத்தின் விடியல் தொலைவாகி தமிழினத்தின் விடுதலையும் கனவாகிப் போகும்!ஜீவேந்திரன்https://www.blogger.com/profile/07783068554389311796noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9005891643361751248.post-49216896602880836412010-03-18T02:17:43.501-07:002010-03-18T02:17:43.501-07:00யாழ்ப்பாணத்திலிருந்து ஒரு மடல்.:
--கஜேந்திரன் குழ...யாழ்ப்பாணத்திலிருந்து ஒரு மடல்.: <br />--கஜேந்திரன் குழுவினரின் அதிகரித்துவரும் அட்டகாசங்கள்-- <br /> கஜேந்திரன் குழுவினரின் அட்டகாசங்கள் யாழ்ப்பாணத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தமிழ்ஈழம் பெற்றுத்தருவோம் என பத்திரிகைகளில் அறிக்கை விடும் கஜேந்திரன் குழுவினர் யாழ்ப்பாணத்தில் அரசாங்க படைகளுடனும் டக்ளஸ் குழுவுடனும் இணைந்து செய்து வரும் அட்டகாசங்களால் யாழ்ப்பாண மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.<br /><br />இராணுவ பாதுகாப்புடனும் டக்ளசின் ஆசிர்வாதத்துடனும் யாழ்ப்பாணத்தில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருக்கும் கஜேந்திரன் குழுவினர் டக்ளஸ் வெல்லுவதை பற்றி பரவாயில்லை. தமிழ் தேசியக் கூட்டமைப்பு தோற்கடிக்கப்பட வேண்டும் என கூறிவருகின்றனர்.<br /><br />வெள்ளைவானில் வரும் கஜேந்திரன் குழுவினர் நள்ளிரவு வேளையில் கூட சுதந்திரமாக நடமாடி வருகின்றனர். கூட்டமைப்பு துண்டுப் பிரசுரம் ஒட்டியுள்ள இடங்களில் அதை கிழித்து விட்டு தங்களின் சுவரொட்டிகளை ஒட்டிவருகின்றனர்.<br /><br />இலங்கை அரசின் பூரண ஆதரவுடனேயே கஜேந்திரன் குழுவினர் தேர்தலில் களமிறக்கப்பட்டிருப்பதாகவும், யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் பேசிக்கொள்கிறார்கள். கஜேந்திரன் மீது இலங்கை அரசாங்கம் முன்னர் தொடர்ந்த வழக்குகளை வாபஸ் பெற்றதுடன் பல கோடி ரூபாய்களை கஜேந்திரன் குழுவுக்கு மகிந்த ராசபக்ச அரசு வழங்கியுள்ளதாக யாழ். பல்கலைக்கழக வர்த்தக முகாமைத்துவ பீட மாணவர்கள் பேசிக்கொள்கின்றனர்.<br /><br />கஜேந்திரனும் பத்மினியும் வெளிநாட்டிலிருந்து வந்தவுடன் மகிந்த, கோதபாயா, டக்ளஸ் ஆகியோரை சந்தித்ததற்கான ஆதாரங்களும் எங்களிடம் உள்ளன. <br /><br />கூட்டமைப்பை தோற்கடிப்பதே தங்கள் நோக்கம் என்றும் உங்களுக்கு எதிராக செயற்படமாட்டோம் என கஜேந்திரன் டக்ளசுக்கு உறுதி கூறியதாகவும் சிலர் பேசிக்கொள்கிறார்கள். <br /><br />கஜேந்திரன் குழுவுக்கு டக்ளசுடனும், மகிந்த ராசபக்ச அரசுடனும் இருக்கும் நெருங்கிய தொடர்பு பற்றி எமக்கு ஆதாரபூர்வமான தகவல்கள் எமக்கு கிடைத்துள்ளது. <br /><br />இதை ஊடகங்களில் வெளியிடுவதால் எமக்கு அரசாங்கத்தினால் அச்சுறுத்தல் வரலாம் என்பதுடன் சட்டபிரச்சினை காரணமாகவும் இதை தற்போது வெளியிடாமல் இருக்கிறோம். <br /><br />இதுபற்றி எம்முடன் தொடர்பு கொண்டால் முழுவிபரங்களையும் நாங்கள் தருவோம். <br /><br />யாழ்ப்பாணத்திலிருந்து சி.பரம்சோதி<br />sothy1970@gmail.comAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9005891643361751248.post-28388986485429072782010-03-16T05:02:24.142-07:002010-03-16T05:02:24.142-07:00தமிழ் அரசியல்வாதிகள் இலகுவாக சோரம் போகக்கூடியவர்கள...தமிழ் அரசியல்வாதிகள் இலகுவாக சோரம் போகக்கூடியவர்கள் என்பதை கடந்த கால வரலாறுகள் மூலம் நாம் கற்ற பாடம். <br />சிங்களவர்களின் திட்டமிடப்பட்ட ஆப்புக்கு முந்திக்கொண்டு நம்மவர்கள் மாட்டிக்கொள்வதை இப்போது காணக்கூடியதாகவிருக்கின்றது. இது தமிழரின் அரசியல் எதிர்காலம் அழிக்கப்படுவதை உணர்த்துக்கின்றது. <br /><br />இந்த இடத்தில்தான் தேசிய தலைவரின் முக்கியத்துவத்தின் இடைவெளியை நாம் பார்க்கின்றோம். <br />ஜீவேந்திரன் அண்ணா, உங்களுடைய ஆய்வு கட்டுரை நீண்டதாக இருந்தாலும் இன்றைய காலத்துக்கு மிகவும் முக்கியத்துவமிக்க ஆய்வு கட்டுரை, இலங்கை தமிழ் அரசியலை வேண்டிநிற்பவர்களுக்கு தெளிவை கொடுக்ககூடியதகவிருப்பதால் எனது வாழ்த்துக்கள்.ugantheepanhttp://ugentheepan.blogspot.com/noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9005891643361751248.post-46555997311695478762010-03-15T23:08:58.150-07:002010-03-15T23:08:58.150-07:00தலைப்பு சூப்பர், படம் கலக்கல்,
கட்டுரை சூப்பரோ, ச...தலைப்பு சூப்பர், படம் கலக்கல், <br />கட்டுரை சூப்பரோ, சூப்பர்; தமிழர்களின் தற்கால அரசியல் நிலவரத்தினை அப்படியே படம் பிடித்துக்காட்டி இருக்கின்றீர்கள் ஜீவேந்திரன். தமிழர்கள் தற்கால அரசியலை விளங்கி வாக்களிக்கா விட்டால், பாவம்தான். <br /><br />// தமிழரது ஒற்றுமையாவது மண்ணாவது... <br />உரிமையா? வெங்காயம்.... <br /><br />விடுதலையா? போங்க பாஸ் போய் வேலைய பாருங்க..... //<br /><br />உண்மையாகவே, மிகவும் சிந்திக்க வைத்த வரிகள் இவை, ஒரு தமிழனாக கொஞ்சம் கவலையோடு......Unknownhttps://www.blogger.com/profile/06885062880456033868noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9005891643361751248.post-1806009940210047652010-03-15T06:37:33.034-07:002010-03-15T06:37:33.034-07:00நிஜத்தினை அப்பிடியே எழுதியிருக்கிறீர்கள். தமிழ் மக...நிஜத்தினை அப்பிடியே எழுதியிருக்கிறீர்கள். தமிழ் மக்களுடைய ஏக தலைவர்கள் என்று கூறிக்கொள்ளுபவர்கள் அடிக்கும் கூத்துக்களை பார்த்தால் உண்மையிலே என்ன சொல்லுவதென்று தெரியவில்லைVathees Varunanhttps://www.blogger.com/profile/13872981317629425498noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9005891643361751248.post-39165272468154619972010-03-15T05:40:19.160-07:002010-03-15T05:40:19.160-07:00வழமைபோல இம்முறையும் தோல்வியடையப்போகும் நமது தமிழ் ...வழமைபோல இம்முறையும் தோல்வியடையப்போகும் நமது தமிழ் மக்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள். <br /><br />உண்மைதான் ஜீவேந்திரன். <br /><br />டக்ளஸ் வென்றாலும் பரவாயில்லை கூட்டமைப்பு வெல்லக்கூடாது என்கிறது கஜேந்திரன் ஆதரவுக்குழு-செய்தி, வாழ்க தமிழ் தேசியம்Paheerathanhttps://www.blogger.com/profile/05655233344128826970noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9005891643361751248.post-9755551927725791782010-03-15T04:32:56.128-07:002010-03-15T04:32:56.128-07:00சிறப்புசிறப்புஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9005891643361751248.post-61207652733391078852010-03-15T03:19:06.578-07:002010-03-15T03:19:06.578-07:00Nallathu saar... Thanks for accepting that tigers ...Nallathu saar... Thanks for accepting that tigers knew politics alsoAnonymousnoreply@blogger.com